அமெரிக்கா: அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்றபின் உக்ரைன் போர் குறித்தும் ரஷியாவை கடுமையாக டிரம்ப் சாடியுள்ளார்.
பதிவேற்றபின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. 42 முக்கிய ஆவணங்களிலும், பல நிர்வாக ரீதியான உத்தரவுகள் என 100க்கும் மேற்பட்டவற்றில் கையொப்பம் இட்டுள்ளார். அமெரிக்கவில் ஆண், பெண் இருபாலாருக்கு மட்டுமே அனுமதி, உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறுவது உள்ளிட்ட முக்கிய முடிவுகளும் அதில் அடங்கும்.
இந்நிலையில் பதவியேற்றபின் உக்ரைன் போர் குறித்தும் ரஷியாவை கடுமையாக டிரம்ப் சாடியுள்ளார்.
2022 பிப்ரவரி தொடங்கி உக்ரானில் ஏறக்குறைய சுமார் 3 ஆண்டுகளாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்துக்கு ரஷிய அதிபர் புதின் இணங்க வேண்டும் என்றும், இல்லையெனில் ரஷியாவுக்கு பெரிய சிக்கல் ஏற்படும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதின் ஒரு ஒப்பந்தத்திற்கு வர வேண்டும், ஒப்பந்ததிற்கு இணங்காமல் அவர் ரஷியாவை அழிக்கிறார் என்று நான் நினைக்கிறேன். பணவீக்கம் உள்ளிட்டவற்றால் ரஷியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று டிரம்ப் கூறியுள்ளார்.