பெங்களூரு: இஸ்ரோவின் 100-வது செயற்கைக்கோளான என்விஎஸ்-02 வழிகாட்டி செயற்கைகோளில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் 100-வது ராக்கெட் விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த புதன்கிழமை விண்ணில் ஏவப்பட்டது. வட்ட வட்டப்பாதையில் ஏவப்பட்ட என்விஎஸ்-02 வழிகாட்டுதல் செயற்கைகோளை உயர்த்தும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரோ தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என்விஎஸ்-02 செயற்கைக்கோளின் சுற்றுவட்டப் பாதையை உயர்த்துவதற்கான ஆக்சிடரைசரை ஏற்றுக்கொள்ளும் வால்வுகள் திறக்கப்படாததால், செயற்கைக்கோளை அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்துவதற்கான செயல்பாடுகள் முடியவில்லை.
இதன் காரணமாக, அந்த பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது, “என்விஎஸ்-02 செயற்கைக்கோள் தற்போது நீள்வட்ட சுற்றுப்பாதையில் உள்ளது அதை புவிசார் சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கான உத்திகள் உருவாக்கப்பட்டு வருகின்றன,” இவ்வாறு தெரிவித்துள்ளது.