சென்னை: சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 9.40 மணிக்கு 176 பேருடன் புறப்பட்டு ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது, விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதைக் கண்டு விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
விமானம் உடனடியாக ஓடுபாதையில் இருந்து இழுவை லாரிகள் மூலம் இழுத்து புறப்படும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, விமானத்தில் ஏறிய பொறியாளர்கள் குழுவினர், விமானத்தை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். பயணிகள் அனைவரும் விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். சரியான நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறை விமானி கண்டுபிடித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது.