சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 26-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும். இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:- தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 26-ம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலையே நிலவும்.
இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியசும், 23 மற்றும் 24-ம் தேதிகளில் ஒரு சில இடங்களில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸும் அதிகமாகவும் வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது. காலை வேளையில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலையில் லேசான மூடுபனி காண வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.