ஈரோடு: முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவரது தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உத்தரவின்படி, கோபியில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
பொதுவாக ஜெயலலிதாவின் நினைவு நாளில் அனைவரும் சென்னை சென்று அஞ்சலி செலுத்துவோம். இந்த முறை ஜெயலலிதா பிறந்தநாளை அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் கொண்டாடுகிறோம்’’ என்றார் செங்கோட்டையன். ‘ஆடு, ஓநாய்கள் இணைந்து வாழ முடியாது’ என இபிஎஸ் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, செங்கோட்டையன், ‘ஆடு, ஓநாய் பற்றி கூறியிருக்கிறார். அவரிடம் கேட்டு கொள்ளுங்கள்.’
இதைத்தொடர்ந்து, அரசு போக்குவரத்து கழக அலுவலக வளாகத்தில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் செங்கோட்டையன் பேசுகையில், “அதிமுக அசைக்க முடியாத சக்தி என்பதை நாடு அறியும். 2026 சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நல்லாட்சியுடன் தமிழகத்தில் நல்லாட்சியை வழங்க உள்ளோம். கடந்த சில நாட்களாக இபிஎஸ் பெயரைச் சொல்வதை தவிர்த்து வந்த செங்கோட்டையன், பிறந்தநாள் நிகழ்ச்சியிலும் ஜெயலலிதாவின் பெயரைக் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.