தமிழ்நாட்டில் நாளை, மார்ச் 11 அன்று 4 மாவட்டங்களில் கனமழையும், எட்டு மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதியிலும் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. நாளைய தினம் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின் படி, பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் விளைவாக, மார்ச் 10 ஆம் தேதி கடலோர தமிழ் நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளைய தினம் (மார்ச் 11), தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழையும், விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.
மார்ச் 12 ஆம் தேதி, தென் தமிழகம் மற்றும் வடதமிழகம் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மார்ச் 13 முதல் 16 வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வானிலை முன்னறிவிப்பு, 10-03-2025 அன்று, ஓரளவு மேகமூட்டத்துடன் வானம் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 11-03-2025 அன்று, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் இடி, மின்னலுடன் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.