சென்னை: த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய் பொது இடங்களுக்கு செல்லும்போது, அதிகப்படியான பொதுமக்கள் கூடுவதால் அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்தனர்.
இந்த நிலையில் இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. ஒய் பிரிவின் பாதுகாப்பின்படி விஜய்க்கு 8 முதல் 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை கமாண்டோக்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்குவர்.