சென்னை: நடிகை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரக்கொண்டா ஆகியோரது திருமணம் பிப்ரவரி 2ம் தேதி, இன்று, உதய்பூரில் இருக்கும் அரண்மனையில் நடைபெற இருப்பதாக செய்தி சமீபத்தில் பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை ராஷ்மிகா.
இது பற்றி இருவருமே எந்த விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் திருமணம் பற்றி பரவும் செய்தி உண்மை இல்லை என ராஷ்மிகா விளக்கம் கொடுத்து இருக்கிறாராம். அவர் முன்னணி பாலிவுட் தளத்திற்கு விளக்கம் கொடுத்து இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.
பிப்ரவரி 26ம் தேதி திருமணம் என மற்றொரு தகவல் பரவி வரும் நிலையில், அந்த தேதியில் திருமணம் நடக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.