பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனின் 34-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸிடம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தோல்வியடைந்தது. இதுகுறித்து அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதார் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். நடப்பு சீசனில் RCB சொந்த மண்ணில் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. அணி பதிவு செய்த நான்கு வெற்றிகளும் மற்ற அணிகளின் மைதானங்களில் பெற்றவை. நேற்று பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் தலா 14 ஓவர்களாக மாற்றப்பட்டது.
இதில், முதலில் பேட் செய்த ஆர்.சி.பி., 9 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி 12.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. “ஆரம்பத்தில் ஆடுகளம் மிகவும் அமைதியாக இருந்தது. இது இரண்டு கட்டமாக இருந்தது. ஆனால் பேட்டிங் யூனிட்டாக நாங்கள் நன்றாக விளையாடியிருக்க வேண்டும். பார்ட்னர்ஷிப் கட்டமைப்பது மிகவும் முக்கியம். விரைவாக விக்கெட்டுகளை இழந்தோம்.

இந்த ஆட்டம் எங்களுக்கு ஒரு பெரிய பாடம் கற்பித்துள்ளது. ஆட்டத்தின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாங்கள் தேவ்தத் படிக்கலை தேர்வு செய்யவில்லை. விக்கெட் மோசமாக இருந்தது என்று நாம் சொல்வதற்கில்லை. மழை காரணமாக நீண்ட நேரம் மூடப்பட்டது. அது பஞ்சாப் பந்துவீச்சாளர்களுக்கு உதவியது. விக்கெட்டைப் பொருட்படுத்தாமல், நாம் நன்றாக பேட்டிங் செய்து வெற்றி ரன்களை ஸ்கோர்போர்டில் சேர்த்திருக்க வேண்டும்.
எங்கள் அணியின் பந்துவீச்சு நம்பிக்கை அளிக்கும் வகையில் செயல்படுகிறது. அது எங்களுக்கு சாதகமானது. பேட்ஸ்மேன்களும் உள்நோக்கத்துடன் விளையாடினர். நாங்கள் எங்கள் தவறுகளை சரிசெய்வோம்” என்று ரஜத் படிதார் கூறினார்.