பாகிஸ்தானின் தொடர்ந்து நடக்கும் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில், இந்தியா பல முக்கிய விமானபடை தளங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியது. இதில், நூர் கான், ரபிக்கி மற்றும் முரித் உள்ளிட்ட தளங்கள் பலத்த சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகின. காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு இந்திய மற்றும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பேசினர். இருவரும் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டனர். விமானப்படை கமாண்டர் வியோமிகா சிங் கூறுகையில், ரபிகியூ, முரித், சக்லாலா, ரஹீம் யார் கான், சுக்கூர், சுனியான் உள்ளிட்ட தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார்.பஸ்ரூர் ரேடார் மற்றும் சியால்கோட் விமான தளங்களும் இந்திய விமானப்படை தாக்குதலுக்கு உள்ளானவை.

இந்த தாக்குதலால் பாகிஸ்தானின் விமானக் கடல் மற்றும் உளவுத்திறனில் குறைவு ஏற்படக்கூடும். பாக் டுரோன் மற்றும் ஏவுகணை செயல்பாடுகளுக்கு இதனால் பின்னடைவு ஏற்படும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.நூர் கான் விமானபடை தளம் ராவல்பிண்டியில் அமைந்துள்ள முக்கிய தளம். இந்திய நகரங்கள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட போர் விமானங்கள் இங்கிருந்தே இயக்கப்பட்டன. ரபிக்கி தளத்தில் மிராஜ் மற்றும் JF-17 விமானங்கள் இருந்தன.முரித் தளத்தில் பாக் தயாரித்த ஷாபார் மற்றும் துருக்கியின் பைரக்தார் டுரோன்கள் இயக்கப்பட்டன.
அவை இந்திய எல்லையை தாண்டி பலமுறை உளவுத்தகவலுக்காக அனுப்பப்பட்டன. இந்திய தாக்குதலால் அவை பெரிதும் பாதிக்கப்பட்டன.இந்நிலையில் இன்று மாலை 5 மணி முதல் இருநாடுகளும் போர் நிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. இரு தரப்பின் ராணுவ அதிகாரிகள் பேச்சு நடத்தி இதற்கான முடிவுக்கு வந்தனர்.இந்த நடவடிக்கைகள் பாகிஸ்தானின் தாக்குதல் மனப்பான்மையை குறைக்கும் வகையில் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.