செயலியில் கிடைத்த தகவலால் குளறுபடி… தேர்தல் அதிகாரி விளக்கம்
சென்னை: விளக்கம் கொடுத்தார்… செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதம் கணக்கிட்டதால் குளறுபடி ஏற்பட்டதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு விளக்கம் அளித்துள்ளார். மேலும் செயலியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் கட்டாயம் பதிவு செய்ய எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் வாக்கு சதவீதத்தை ஒருசிலர் மட்டுமே செயலியில் பதிவிட்டதால் கணக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.