பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
விழாவிற்கு பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கி.ரெ.பழனிவேல் முன்னிலை வகித்தார்.
பேரூராட்சி செயல் அலுவலர் பூ.கமலக்கண்ணன், தலைமை எழுத்தர் கே.மதியரசன், துப்புரவு ஆய்வாளர் ஆர்.செந்தில் குமரகுரு, எழுத்தர் அ.சரவணன், து.ராஜேஷ், மு.ராதிகா,
பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், டெங்கு பணியாளர்கள், பரப்புரையாளர்கள்மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் பேரூராட்சி அலுவலர்கள் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை உள்ளிட்ட பொங்கல் பரிசுகளை வழங்கினார். மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது