சென்னை: சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் மத்திய உள்துறை இணையமைச்சர் எல். முருகன் கூறியதாவது:-
கரூரில் நடந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கக்கூடாது. கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

சம்பவம் குறித்து அறிந்ததும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக முதல்வரைத் தொடர்பு கொண்டு நிலைமை குறித்து விசாரித்தார். தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் முறையான விளக்கம் கோரியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் கோரிய விளக்கத்திற்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும். தமிழக அரசு பதிலளித்த பிறகு, அது குறித்து விரிவாகப் பேசலாம் என்று அவர் கூறினார்.