பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர், இந்தியாவுடன் மோதலை தீவிரப்படுத்தி வருகிறார் என முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவுடன் அமைதி பேச தவிர்த்து வருவதற்குப் பின்னணி அசிம் முனீரே என்று கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் பலதடவைகள் சிறப்பு தாக்குதல்களிலும் பதிலடிகளிலும், இருநாடுகளும் தங்கள் எல்லையை மீறாமல் செயல்பட்டன. ஆனால் இப்போது எல்லை மீறி மோதல்களில் ஈடுபடுவதால், பாகிஸ்தான் புதிய போர்க் சூழலுக்குள் இழுக்கப்படுகிறது.இம்ரான் கானின் உதவியாளர், பொருளாதார திணிப்பில் உள்ள நாட்டை போர் நிலைக்கு அழைத்து செல்ல முயல்பவர் அசிம் முனீர எனக் குற்றம் சாட்டுகிறார்.
இதன் மூலம், பிரதமர் ஷாபாஸ் ஷெரிப் மீது மக்களின் ஆதரவை குறைத்து, தன்னுடைய அதிகாரத்தை அதிகரிக்க நினைக்கிறார் என்றும் தெரிவித்தார். பாகிஸ்தானின் தற்போதைய நிலை, ஒரு பெரிய போரைத் தாங்கும் நிலையில் இல்லை என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த தாக்குதல்கள், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கின்றன.
முன்னாள் பிரதமரின் தரப்பினரே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதால், இது உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அசிம் முனீரின் நடவடிக்கைகள், நாட்டை தேவையற்ற போரில் தள்ளுகிறது எனவும் கூறப்படுகிறது. பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இருந்தும் அதை விரும்பாத நிபந்தனை, அவரது அரசியல் நோக்கங்களைப் புரிந்துகொள்ள வழிவகுக்கிறது.