புது டெல்லி: மக்களவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் முரளிதர் மோஹோல் கூறியதாவது:-
2019-20 முதல் 2024-25 வரையிலான கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) மற்றும் பொது-தனியார் கூட்டாண்மை மூலம் விமான நிலையங்களை நவீனமயமாக்க ரூ.96,000 கோடிக்கும் அதிகமான மூலதனச் செலவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி, கோலாப்பூர், ஜபல்பூர், குவாலியர், ராஜ்கோட், லே, ஹூப்பள்ளி, இம்பால், ஜோத்பூர், உதய்பூர், ராஜமுந்திரி, பெலகாவி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பல விமான நிலையங்களில் விரிவாக்கத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முரளிதர் கூறினார்.