By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    நேர்காணலை பாதியில் நிறுத்திய டிரம்ப்… என்.பி.சி. தொகுப்பாளருடன் கடும் வாக்குவாதம்!
    1 Min Read
    ஹோர்முஸ் ஜலசந்தி அருகே 4 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: அமெரிக்கா தகவல்
    1 Min Read
    இம்ரான்கான் தம்பதியை நள்ளிரவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சர்ச்சை
    1 Min Read
    ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய முடியவில்லை: ஐ.நா. முகமை
    1 Min Read
    மோடி என் நல்ல நண்பர்; இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் விரைவில் – டிரம்ப்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    இந்தியா – இந்தோனேசியா உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை… மோடி பயணத்திற்கு முன் முக்கிய சந்திப்பு!
    1 Min Read
    நடிகர் சலீம் குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்… “மறக்க முடியாத கலைஞர்” என புகழாரம்!
    1 Min Read
    அமெரிக்காவில் தெலுங்கானா இளைஞர் சுட்டுக்கொலை… உடலை இந்தியா கொண்டு வர குடும்பம் கோரிக்கை!
    1 Min Read
    கடும் வெயில் எதிரொலி… தெலுங்கானாவில் பள்ளிகள் திறப்பு ஜூன் 15-க்கு ஒத்திவைப்பு!
    1 Min Read
    திருமணத்திற்குப் பிறகு கணவரிடம் உண்மையை கூறிய இளம்பெண்… 6 ஆண்டுகள் பழைய பாலியல் வழக்கில் நடவடிக்கை!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    “காவல் நிலையங்கள் தூய்மையாக இருக்க வேண்டும்”… சென்னை கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!
    1 Min Read
    ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை நாளை தொடக்கம்?… பெண்கள் பாதுகாப்புக்கான புதிய திட்டம்!
    1 Min Read
    போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிரடி வேட்டை… ‘மேக்ஸ்’ மோப்பநாய் களமிறங்கியது!
    1 Min Read
    ESIC மருத்துவ இடஒதுக்கீட்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஜூன் 21 கடைசி நாள்
    1 Min Read
    தமிழகத்தில் வெயில் சதமடிப்பு: மீனம்பாக்கத்தில் 104.72 டிகிரி பாரன்ஹீட் பதிவு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: உரிமை கோராத 12 பேரின் உடல்கள்… போலீசாரே உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்தனர்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > உரிமை கோராத 12 பேரின் உடல்கள்… போலீசாரே உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்தனர்
தமிழகம்

உரிமை கோராத 12 பேரின் உடல்கள்… போலீசாரே உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்தனர்

Nagaraj
Last updated: December 12, 2025 7:10 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

தஞ்சாவூர்: தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரேத கிடங்கில் யாரும் உரிமை கோராமல் இருந்த 12 பேரின் உடல்களை போலீசாரே அடக்கம் செய்தனர்.

தஞ்சை மாநகரில் நகர கிழக்கு , மேற்கு , தெற்கு, கள்ளப்பெரம்பூர் மற்றும் மருத்துவக் கல்லூரி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் அனாதையாக இறந்து கிடந்த 12 பேரின் உடல்களை போலீசார் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரேத கிடங்கில் வைத்தனர். பிரேத கிடங்கில் அடையாளம் தெரியாதவர்களின் சடலங்கள் குறிப்பிட்ட நாட்கள் வைத்து பாதுகாக்கப்படுவது வழக்கம்.

அந்த குறிப்பிட்ட நாட்களில் இறந்தவர்களின் உடல்களை உரியவர்கள் வந்து தகுந்த ஆதாரத்துடன் உரிமை கோர வேண்டும். இல்லையெனில் இறந்தவர்களின் உடல்கள் ஆதரவற்ற சடலங்களாக கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு அருகில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்படும். அதன்படி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரேத கிடங்கில் உள்ள 12 உடல்களை ஆதரவு கோரி யாரும் வராததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் இன்ஸ்பெக்டர் சந்திரா, சப்- இன்ஸ்பெக்டர் மனோகரன், தலைமை காவலர்கள் குருமூர்த்தி, சுந்தரமூர்த்தி, மணிகண்டன், தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், பிரேத பரிசோதனை கூட பணியாளர்கள் ஆகியோர் அந்த 12 உடல்களை அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.


இதையடுத்து 12 (8 ஆண்,4 பெண்) பேரின் உடல்களை அடக்கம் செய்ய இருப்பதாக மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் போலீசார் தெரிவித்தனர். இதை ஏற்று கொண்ட நிர்வாகம், உரிய சான்றிதழ்களில் போலீசாரிடம் கையெழுத்து பெற்று இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய கொண்டு செல்ல அனுமதித்தனர். இதையடுத்து அந்த 12 பேரின் உடல்களையும் ஆம்புலன்ஸ் மூலம் வடக்குவாசலில் உள்ள ராஜாகோரி மயானத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர். பின்னர் அங்கு தூய்மை பணியாளர்கள் உதவியுடன் தனித்தனியாக குழிகள் தோண்டப்பட்டு, 12 உடல்களுக்கும் மாலை அணிவிக்கப்பட்டு, உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. காவல்துறை சார்பில் இதுவரை ஒரு வருடத்தில் தஞ்சை மாநகரில் 126 உடல்களுக்கு இறுதி மரியாதை செய்து நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் கூறுகையில், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடையாளம் தெரியாத உடல்கள் அதிகம் உள்ளது. இவர்கள் வீட்டை விட்டு வந்தவர்களாக இருக்கலாம் அல்லது வந்த இடத்தில் உயிரிழந்து அவர்களது உறவினர்களால் அடையாளம் தெரியாத வகையிலும் இருக்கலாம். எனவே அவ்வாறு உயிரிழந்தவர்களின் உடல்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்படும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு அந்த உடல்களை அடக்கம் செய்வோம். அந்த வகையில் நேற்று 12 பேரில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அடக்கம் செய்யப்பட்ட உடல்களுக்கு உரிய இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. நான் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற பிறகு இதுவரை 84 உடல்கள் நல்லடக்கம் செய்துள்ளேன். அதேபோல் இந்த வருடத்தில் மருத்துவக் கல்லூரி காவல் ஆய்வாளர் சந்திரா தலைமையில் 126 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

You Might Also Like

“காவல் நிலையங்கள் தூய்மையாக இருக்க வேண்டும்”… சென்னை கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!

‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை நாளை தொடக்கம்?… பெண்கள் பாதுகாப்புக்கான புதிய திட்டம்!

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிரடி வேட்டை… ‘மேக்ஸ்’ மோப்பநாய் களமிறங்கியது!

ESIC மருத்துவ இடஒதுக்கீட்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஜூன் 21 கடைசி நாள்

தமிழகத்தில் வெயில் சதமடிப்பு: மீனம்பாக்கத்தில் 104.72 டிகிரி பாரன்ஹீட் பதிவு

TAGGED:bodiescremationMedical CollegepoliceSPThanjavurஉடல்கள்எஸ்.பி.தஞ்சாவூர்நல்லடக்கம்போலீசார்மருத்துவக்கல்லூரி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

“உதயநிதி தலைமையில் திமுக பெரும் தோல்வி சந்திக்கும்”… மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?