திருநெல்வேலி: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலக உள்ளதாக வெளியாகும் தகவல்களுக்கு மத்தியில், அவரது ராஜினாமா கடிதம் எதுவும் வரவில்லை என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போவதாக வெளியாகும் தகவல்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
“அண்ணாமலை இதுவரை புதிய கட்சி தொடங்குவது குறித்து யாரிடமும் பேசவில்லை. நாங்களும் அவரிடம் அது குறித்து பேசவில்லை. அவர் தொடர்ந்து கட்சியுடன் தொடர்பில் உள்ளார்” என்றார்.
அண்ணாமலை ராஜினாமா கடிதம் அளித்துள்ளாரா என்ற கேள்விக்கு, “மாநிலத் தலைவராக என்னிடம் எந்த கடிதமும் வரவில்லை. அவர் இதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை” என்று பதிலளித்தார்.
மேலும், தவெக அரசின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், சட்டம் ஒழுங்கு, கஞ்சா விற்பனை, பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்வதாக குற்றம்சாட்டினார்.