விண்வெளியில் அதிக நாட்கள் தங்கிய 2-வது அமெரிக்கர் என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார். சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் 286 நாட்கள் விண்வெளியில் தங்கியுள்ளனர். அவர்கள் 12,13,47,491 மைல்கள் பயணம் செய்துள்ளனர். அவை பூமியை 4,576 முறை சுற்றி வந்துள்ளன. சுனிதா 62 மணி நேரம் 6 நிமிடங்கள் விண்வெளியில் நடந்துள்ளார். இதன் மூலம் அதிக நேரம் நடந்த முதல் பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.
விண்வெளியில் அதிக காலம் நடந்தவர்கள் பட்டியலில் 4-வது இடம் பிடித்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் நாசாவுக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்த சுனிதா வில்லியம்ஸ், தனது அணி வீரர் வில்மோருடன் முதன்முறையாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- விண்வெளியில் இருந்து இந்தியாவை பார்த்தது ஆச்சரியமாக இருந்தது.

ஒவ்வொரு முறையும் நாங்கள் இமயமலையில் பயணிக்கும் போது, புட்ச் வில்மோர் சில அற்புதமான புகைப்படங்களை எடுத்தார். இமயமலை இந்தியாவுக்குள் பாய்வது போல் வியத்தகு காட்சி அளித்தது. இந்தியாவை விண்வெளியில் இருந்து பார்க்கும் போது, மும்பையிலிருந்து குஜராத் வரையிலான விளக்குகள் இரவில் ஒளிர்ந்தன. ஒரு நாள் என் தந்தையின் தாயகம் செல்ல வேண்டும். இந்தியா ஒரு சிறந்த நாடு.
அற்புதமான ஜனநாயகம். ஆக்சியம் மிஷனுடன் விண்வெளிக்கு செல்லும் இந்திய தடகள வீரர் குறித்து நான் பெருமைப்படுகிறேன். விண்வெளி ஆய்வில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்தியா எடுத்து வரும் முயற்சி பாராட்டுக்குரியது. எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவுக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறு சுனிதா வில்லியம்ஸ் கூறினார்.