கஜகஸ்தான்: கஜகஸ்தானில் சாலை விபத்தில் இந்திய மருத்துவ மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் ோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கஜகஸ்தானில் உள்ள செமே மருத்துவப் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இந்தியாவை சேர்ந்த 11 மாணவர்கள், அல்டாய் மலைத்தொடர் பகுதிக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வாகனம் விபத்தில் சிக்கியது. இதில் மிலி மோகன் (25) என்பவர் உயிரிழந்தார். ஆஷிகா ஷீஜாமினி, ஜசீனா ஆகியோர் காயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களின் நிலைமை சீராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.