இஸ்ரேல் : போரிடுவதை தவிர வேறு வழியில்லை என்று இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.
காசா மீதான தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தி இருக்கும் இஸ்ரேல், போரிடுவதை தவிர வேறு வழியில்லை எனத் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 51,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஹமாஸ் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படும் வரை போரை முடிவுக்கு வர முடியாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
காசா மக்களுக்கு என்றுதான் விடிவுகாலம் வருமோ என சமூக ஆர்வலர்கள் கவலையுடன் உள்ளனர்.