டெல்லி: டெல்லியில் இருந்து கோவா நோக்கிச் சென்று கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 6E-6271, நேற்று இரவு மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தின் ஒரு எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதே இதற்குக் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் இரவு 8 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானத்தில், நடுவானில் எஞ்சின் கோளாறு ஏற்பட்டதை கண்டுபிடித்த விமானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மும்பைக்கு திருப்பி விடப்பட்டு, இரவு 9.52 மணியளவில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தின் பாதுகாப்பான தரையிறக்கத்திற்குப் பிறகு, பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.