புது டெல்லி: உலகம் முழுவதும் மாறிவரும் புவிசார் அரசியல் இயக்கவியலுக்கு மத்தியில், இந்தியாவின் கடல் எல்லைகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. மேலும், சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களையும் சமாளிக்க வேண்டியுள்ளது.
எனவே, இந்திய கடற்படையில் 200 போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, தற்போது இந்தியாவில் பெரிய மற்றும் சிறிய 55 போர்க்கப்பல்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன் மதிப்பு ரூ. 99,500 கோடியாக உள்ளது.

மேலும், ரூ. 2.35 கோடி செலவில் உள்நாட்டில் 74 போர்க்கப்பல்களை உருவாக்கும் ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை கடற்படை பெற்றுள்ளது. மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது:-
“அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குப் பிறகு, இந்தியா மட்டுமே விமானம் தாங்கி கப்பல்களை வடிவமைத்து, தயாரித்து இயக்கி வருகிறது.” தற்போது இந்திய கடற்படையில் 140 போர்க்கப்பல்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.