புதுச்சேரி: மக்கள் தொகை கணக்கெடுப்பு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பணியாகும். என்று புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு, வருவாய் மற்றும் மேலாண்மைத் துறை மூலம், கடந்த 25-ந் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில், வரவிருக்கும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்பாடுகளை சிறப்பாக முன்னெடுக்க பொதுமக்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பணியாகும்.
இந்த தரவுகள் தேசிய திட்டமிடல், கொள்கை வடிவமைப்பு மற்றும் நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளுக்கான தொகுதி வரையறை மற்றும் ஒதுக்கீடு போன்ற செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றுகின்றன. சுய கணக்கெடுப்பு மக்கள் தொகைகணக்கெடுப்பு 2027-ன் முதல் கட்டமாக வீட்டு பட்டியல் மற்றும் வீட்டு கணக்கெடுப்பு புதுவை யூனியன் பிரதேசத்தில் அட்டவணைப்படி நடைபெறும்.
பொதுமக்கள் தங்களே sE.census.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தகவல்களை பதிவு செய்யும் சுய கணக்கெடுப்பு, வருகிற மே 7-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெறும். ஜூன் 1-ந் தேதி முதல் கணக்கெடுப்பு அலுவலர்கள் வீடு தோறும் சென்று தகவல்களை சேகரிக்கும் பணியை ஜூன் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை மேற்கொள்ளப்படும். இந்த கணக்கெடுப்பின் பின் போது எட்டு அமைப்பு, குடிநீர் வசதி, கழிப்பறை, சமையல் எரிபொருள், மின்சாரம் மற்றும் இணைய வசதி உள்ளிட்ட 33 விவரங்கள் சேகரிக்கப்படும்.
1948 மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டப்படி, பொதுமக்கள் சில முக்கிய சட்டப்பூர்வ கடமைகளை கடைபிடிக்க வேண்டும். கணக்கெடுப்பு அலுவலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான மற்றும் துல்லியமான பதில்களை வழங்குவது கட்டாயமாகும். வீடுகளில் கணக்கெடுப்பு அலுவலர்கள் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.
தேவையானபோது கணக்கெடுப்பு படிவங்களை சரியாக மாற்றி வழங்க வேண்டும். கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் அனைத்து விவரங்களும் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும். இந்த தகவல்கள் வழக்குகளில் சான்றாகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்பது உறுதியாக அறிவிக்கப்படுகிறது. அபராதம் கணக்கெடுப்பு பணிகளில் ஒத்துழைக்காமல் இருப்பது, தவறான தகவல் வழங்குவது. அல்லது அலுவலர்களுக்கு அனுமதி மறுப்பது போன்ற செயல்கள் சட்டப்படி குற்றமாகும்.
இத்தகைய விதி மீறல்களுக்கு ரூ.1000-ம் வரை அபராதம் விதிக்கப்படும். எனவே, அனைத்து மக்களும் இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பணியில் ஆர்வத்துடன் பங்கேற்று பணிகள் வெற்றிகரமாக நடைபெற துல்லியமான தகவல்களை ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.