பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தீவிரவாத முகாம்களை அழித்தது. இதற்கு பதிலளிக்க பாகிஸ்தான் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்தியா சீரான பதிலடி கொடுத்ததால் பாகிஸ்தானின் டிரோன்கள் செயலிழந்தன. ஆனாலும் மே 8, 9 ஆகிய இரவு நேரங்களில் பாகிஸ்தான் எல்லையை தாக்கியது.இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலால் பாகிஸ்தான் முடக்கமடைந்தது.

அணு ஆயுதம் பயன்படுத்தலாம் என பாகிஸ்தான் தீர்மானித்தபோதும் பின்னர் திட்டத்தை கைவிட்டது. இன்று காலை பாகிஸ்தான் மீண்டும் குடியிருப்புகள், மருத்துவமனை, பள்ளிகளை தாக்கியது. இந்தியா அதையும் தடுப்பதில் வெற்றி பெற்றது.சமாதானத்திற்கு அமெரிக்கா, சீனா, சவுதி உள்ளிட்ட நாடுகள் அழைப்பு விடுத்தன. அமெரிக்க அதிபர் டிரம்ப், இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்தில் ஒப்புக்கொண்டதாக கூறினார்.
இதனையடுத்து பாகிஸ்தான் டிஜிஎம்ஓ இந்திய ராணுவ ஜெனரலை அழைத்தார்.இரு நாடுகளும் தரைவழி, வான்வழி, கடல்வழி தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டன. இருநாடுகளும் மே 12 அன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. ராணுவ ஜெனரல்களின் பணி என்பது முக்கியமானது. அவர்கள்தான் ராணுவ நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பார்கள்.போர் மற்றும் பதிலடி தாக்குதலுக்கான திட்டங்களை வியூக ரீதியாக வகுப்பது அவர்களின் பணி.
மூத்த அதிகாரிகளாக இருந்து, உளவுத்துறையுடன் இணைந்து செயல் படுவார்கள். எல்லை விவகாரங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது இவர்களின் தலைமைச் செயலாகும். ராணுவ நடவடிக்கைகளின் தற்போதைய நிலையை பரிசீலித்து தீர்வுகள் கூறுவார்கள். அவசர சூழ்நிலைகளில் கட்டளைகள் வழங்கும் அதிகாரமும் இவர்களுக்கு உண்டு.இந்திய-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில், ராணுவ ஜெனரல்களுக்கிடையிலான இந்த அழைப்பு மற்றும் ஒப்பந்தம் முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.