புதுடில்லி: மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 4 பேரை நியமித்துள்ளார்.
கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, சட்டம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மாநிலங்களவையின் நியமன எம்.பி. பதவியை வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது.
மாநிலங்களவையில் 12 உறுப்பினர்களை நியமன எம்.பி.க்களாக குடியரசுத் தலைவர் நேரடியாக நியமிப்பார். அவ்வகையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்தார்.
அதன்படி உஜ்வால் நிகம் (பாஜக), மூத்த வழக்கறிஞர், ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர், சதானந்தன் மாஸ்டர் (பாஜக), ஆசிரியர், மீனாக்ஷி ஜெயின், வரலாற்று ஆய்வாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.