திருச்சி: பத்திரப்பதிவு குறித்து தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அசல் ஆவணங்களை காட்டினால் மட்டுமே பத்திரப்பதிவு செய்யப்படும் என சார்பதிவாளர்கள் பொதுமக்களை திருப்பி அனுப்பக் கூடாது என தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறை கூடுதல் ஐ.ஜி. வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூல ஆவணத்தின் நகல் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள நகலை பார்த்து பத்திரப்பதிவு செய்ய வேண்டும்” என சார்பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.