By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    விமான எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளை எச்சரிக்கையுடன் இயக்க அறிவுறுத்தல்..!!
    2 Min Read
    வங்கதேசத்தில் இந்து வியாபாரி படுகொலை: பரிதாபகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
    1 Min Read
    விமானத்தை முந்தும் சீனாவின் புதிய மேக்லெவ் ரயில்: உலக போக்குவரத்துக்கு புதிய தொனியாக மாற்றம்!
    1 Min Read
    ஈரான் – அமெரிக்கா மோதலில் நடுவர் வேடம் வேண்டாம் என ரஷ்யா பின் வாங்கல்
    1 Min Read
    சீனாவில் அதிர்ச்சி சம்பவம்: ஆடம்பர வாழ்க்கைக்காக குழந்தைகளை விற்ற தாய் கைது
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சபரிமலையில் நவக்கிரக கோயில் கும்பாபிஷேகம்.. குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
    1 Min Read
    நாளை மாலை பூமிக்குத் திரும்பும் சுபான்ஷு சுக்லா
    1 Min Read
    பாஜகவுக்கு வேதாந்தா நிறுவனத்தின் நன்கொடைகள் அதிகரிப்பு
    1 Min Read
    திருப்பதியில் அலைமோதிய மக்கள்.. 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்..!!
    1 Min Read
    உப்பு அதிகமாக சாப்பிட்டால் பக்கவாதம், இதய நோய் ஏற்படும்: ஐசிஎம்ஆர் எச்சரிக்கை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகள் ஸ்டிரைக்.. சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்
    1 Min Read
    தடையை மீறி கேத்தரின் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள்..!!
    1 Min Read
    வைகை அணை பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை ..!!
    2 Min Read
    செல்போன் கலாச்சாரம் அதிகரிப்பதைத் தடுக்க அரசுப் பள்ளி கையாளும் புதிய உத்தி..!!
    2 Min Read
    மதுரை கள்ளழகர் கோயிலில் வரும் 24-ம் தேதி ஆடி அமாவாசை விழா
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பட்டுக்கோட்டை பகுதியில் காட்டெருமை… ரோந்து பணியில் வனத்துறையினர்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > பட்டுக்கோட்டை பகுதியில் காட்டெருமை… ரோந்து பணியில் வனத்துறையினர்
தமிழகம்

பட்டுக்கோட்டை பகுதியில் காட்டெருமை… ரோந்து பணியில் வனத்துறையினர்

Nagaraj
Last updated: February 18, 2025 4:01 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பகுதியில் உலா வந்த காட்டெருமை பட்டுக்கோட்டை பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த காட்டெருமையை பிடிக்க வனத்துறை அலுவலர்கள் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக இரவு, பகல் பாராது ரோந்துப்பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தஞ்சை பகுதியில் காட்டெருமை ஒன்று உலா வந்ததை கண்டு மக்கள் அச்சமடைந்தனர். மாரியம்மன்கோவில், காட்டுத்தோட்டம், தளவாய்பாளையம் என்று பல பகுதிகளில் ஆசுவாசமாக அந்த காட்டெருமை உலா வந்ததுள்ளது. இதை பார்த்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் ஆனந்தகுமார் உத்தரவின் பேரில், தஞ்சாவூர் வனசரக அலுவலர் ரஞ்சித், வனவர் இளையராஜா, ரவி,மணிமாறன் ஆகியோர் நான்கு குழுக்களாக பிரிந்து காட்டெருமையை தஞ்சையின் பல பகுதிகளில் தேடினர். மேலும் ட்ரோன் வாயிலாகவும் தேடுதல் வேட்டை நடந்தது. இரவு நேரத்தில் தேட முடியாத நிலையில் மறுநாள் காட்டெருமை நடமாட்டம் குறித்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதில் சில இடங்களில், காட்டெருமையின் கால்தடங்களை பார்த்துள்ளனர் வனத்துறையினர். பின்னர் அப்பகுதி மக்களிடம் காட்டெருமையை கண்டால் துரத்துவதோ, துன்புறுத்துவதோ செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.

தஞ்சை பகுதியில் உலா வந்த காட்டெருமை இந்தியா கவுர் என்ற பெயர் கொண்டவை. இது மிகவும் மென்மையான மிருகம். மனிதன் அதை மிரள செய்தால் மட்டுமே தாக்க முயலும் என்று வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இந்த காட்டெருமை மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து கிழக்கு தொடர்ச்சி மலையான திருச்சி பச்சைமலை, அரியலுார் மலை பகுதி வழியாக, கொள்ளிடம் ஆற்றுப்படுகை வழியாக தஞ்சை பகுதிக்கு வந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த காட்டெருமை தஞ்சை நகர் பகுதியிலிருந்து வெளியேறி பட்டுக்கோட்டை பகுதிக்கு சென்றுள்ளது. பட்டுக்கோட்டை பகுதிகளான பொன்னாப்பூர், சடையார்கோவில், நெய்வாசல் பகுதியில் காட்டெருமை உலா வருவதாக அப்பகுதி மக்கள் பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் 2 குழுவினர் காட்டெருமையின் நடமாட்டம் குறித்து கண்காணிக்க பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர்.

பொன்னாப்பூர், தொண்டராம்பட்டு, ஆத்திக்கோட்டை, வண்டாங்கோட்டை, பாப்பாவெளி பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை தேடுதல் வேட்டை நடத்தினர். வனத்துறை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் காட்டெருமை நடமாட்டம் தென்பட்டுள்ளது. பட்டுக்கோட்டையில் உலா வரும் காட்டெருமையை பார்ப்பதற்காக ஒரு கிராமத்தில் மக்கள் இரவு நேரத்தில் வீட்டிற்கு வெளியே திரண்டு இருந்துள்ளனர். இவர்களை ரோந்து பணியில் இருந்த வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் தலைமையிலான வனத்துறையினர் வீட்டிற்குள் செல்லும்படி அறிவுறுத்தியும், காட்டெருமையை கண்டால் அதை துன்புறுத்தக்கூடாது என்று கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் இந்த காட்டெருமையை பத்திரமாக பிடிக்க வனத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மயக்க மருந்து ஊசி செலுத்தி காட்டெருமையை பிடிக்க மருத்துவக்குழுவினர் வருகை தர உள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.  தஞ்சை மற்றும் பட்டுக்கோட்டையில் இந்த காட்டெருமை உலா வந்தாலும் இதுவரை அதனால் யாருக்கும் எவ்வித தீங்கும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலையில் காட்டெருமை திருவாரூர் – தஞ்சாவூர் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியில் உலா வந்து கொண்டு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

You Might Also Like

ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகள் ஸ்டிரைக்.. சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்

தடையை மீறி கேத்தரின் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள்..!!

வைகை அணை பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை ..!!

செல்போன் கலாச்சாரம் அதிகரிப்பதைத் தடுக்க அரசுப் பள்ளி கையாளும் புதிய உத்தி..!!

மதுரை கள்ளழகர் கோயிலில் வரும் 24-ம் தேதி ஆடி அமாவாசை விழா

TAGGED:fieldforest departmentGrove areapublicWild Cattleகாட்டடெருமைதோப்பு பகுதிபொதுமக்கள்வயல்வெளிவனத்துறையினர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகள் ஸ்டிரைக்.. சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?