சென்னை. தமிழர்களை பாஜக எதிரியாக நினைக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர் சட்டத்திருத்த மசோதாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த சட்ட திருத்தம் மூலம் தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சிலின் பெயரை, மெட்ராஸ் பார் கவுன்சில் என பெயர் மாற்ற மத்திய அரசு துடிப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
தமிழ், தமிழர்கள் என்றாலே பாஜக வெறுப்பை காட்டுவதாகவும், இதற்கெல்லாம் மத்திய அரசு பதில் சொல்ல வேண்டிய காலம் வரும் எனவும் சாடியுள்ளார்.