மும்பை: யாஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் ஆகஸ்ட் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
1940 முதல் 1970-ம் ஆண்டு வரையிலான கோவா மாபியா மற்றும் போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது. ஆக்ஷன், திரில்லர் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 3 மணி நேரம் 14 நிமிடங்கள் ஓடும் இப்படம் உலகம் முழுவதும் சுமார் 12 ஆயிரம் திரைகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், மும்பை மற்றும் பெங்களூருவில் உள்ள பிரீமியம் திரையரங்குகளில் டிக்கெட் விலை ரூ.2,000-ஐ கடந்துள்ளது. மும்பையில் அதிகபட்சமாக ரூ.2,250 வரையும், பெங்களூருவில் ரூ.2,200 வரையும் டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
