உலகப் புகழ்பெற்ற முதலீட்டாளர் வாரன் பஃபெட், 133 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் உலகின் ஆறாவது பணக்காரராக உள்ளார். பெர்க்ஷயர் ஹாத்வேயின் தலைமை நிர்வாகியாக பல ஆண்டுகளாக பதவியிலிருந்த பஃபெட், 2025ஆம் ஆண்டு இறுதியில் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அவரது நெருங்கிய நபராகவும், வெற்றிகரமான நிர்வாகியாகவும் அஜித் ஜெயின் பெரும் செல்வாக்கு பெற்றவராக இருக்கிறார்.
அஜித் ஜெயின், பெர்க்ஷயரின் காப்பீட்டு பிரிவின் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார். 2025 பங்குதாரர்கள் கூட்டத்தில், பஃபெட், செயற்கை நுண்ணறிவுக்கான கேள்விகளை நேரடியாக ஜெயினிடம் எழுப்பினார். காப்பீட்டு துறையில் AI பயன்படுத்துவதன் தாக்கம் குறித்து ஜெயின் தெளிவாக பதிலளித்தார். அவர் எச்சரிக்கையாகவும், அளவான அணுகுமுறையுடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஒடிசாவில் பிறந்த அஜித் ஜெயின், IIT கரக்பூரில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்று, பின்னர் ஹார்வர்ட் பிஸ்னஸ் ஸ்கூலில் எம்பிஏ முடித்துள்ளார். IBM மற்றும் மெக்கின்சியில் பணியாற்றிய பிறகு, 1986ல் பெர்க்ஷயரில் சேர்ந்தார். பஃபெட், அவரது திறமைகளை வெளிப்படையாக பாராட்டியுள்ளார்.
அஜித்தின் பெற்றோருக்கு எழுதிய கடிதம் வழியாக, அவர் “உங்களுக்கு அஜித்தைப் போல வேறு மகன்கள் இருக்கிறார்களா?” என கேட்டதோடு, “மற்றொரு அஜித் இருந்தால் எனக்கு மாற்றியமைக்க தயங்க வேண்டாம்” என்றும் கூறியுள்ளார். ஜெயின் உருவாக்கிய காப்பீட்டு வணிகம், பெர்க்ஷயருக்கு 37 பில்லியன் டாலர் லாபம் ஈட்டித்தந்துள்ளது.200 மில்லியன் டாலர் நிகர மதிப்புடன் ஜெயின், பெர்க்ஷயரின் வெற்றிக்கு முக்கிய சக்தியாக இருக்கிறார். புதிய CEO ஆக கிரெக் ஆபெல் நியமிக்கப்பட்டுள்ளபோதும், பஃபெட், ஜெயினின் பங்களிப்பு குறித்து மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். AI போன்ற தொழில்நுட்பங்களில் பெர்க்ஷயர் சுறுசுறுப்பாக இல்லை என்றாலும், தேவையெனில் செயல்படத் தயார் என ஜெயின் தெரிவித்தார்.