அமெரிக்கா: அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீராங்கனைகள் வெற்றியுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
நடப்பு சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக், கொலம்பியாவின் எமிலியானா அரங்கோவை 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் உலகின் முதல்நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, ஆஸ்திரேலியாவின் தாலியா கிப்சனை 6-2, 7-6 என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
