By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    100 குழந்தைகளுக்கு சொத்து! டெலிகிராம் சிஇஓ பவெல் துரோவ் எடுத்த அதிரடி முடிவு
    1 Min Read
    ஈரான் மீது அமெரிக்கா நேரடி தாக்குதலா? டிரம்ப் அறிவிப்பு: இருவாரங்களில் முடிவு
    2 Min Read
    டிரம்பை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்த பாகிஸ்தான்..!!
    2 Min Read
    “எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது” : டொனால்டு டிரம்ப்
    1 Min Read
    1,600 கோடி லாகின் விவரங்கள் கசிவு – பயனர்கள் பாஸ்வேர்டுகளை உடனடியாக மாற்ற வேண்டியது அவசியம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஈரான் தலைவர் கொலைப்பட்டால் என்ன செய்வீர்கள்? – புதினின் பதில் சமூக வலைதளங்களில் வைரல்
    1 Min Read
    ஏர் இந்தியா விமான விபத்து; விமான கட்டணங்கள் குறைந்ததால் பயணிகள் மகிழ்ச்சி
    2 Min Read
    பிஎம் கிசான் திட்டம் – யாருக்கு பணம் கிடைக்காது?
    1 Min Read
    ஈரானில் இருந்து 290 இந்திய மாணவர்கள் டில்லி வந்தடைந்தனர்
    1 Min Read
    விமான பாதுகாப்புக்கு குறைந்த நிதி ஒதுக்கீடு: பார்லி., நிலைக்குழு அதிருப்தி வெளியீடு
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஆப்பிரிக்க குரங்குகள், ஆமைகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்..!!
    1 Min Read
    காத்திருப்புப் பட்டியல் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகத்தின் அதிரடி முடிவு..!!
    2 Min Read
    திடீர் மழையால் சென்னை, புறநகர்ப் பகுதிகளில் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி..!!
    1 Min Read
    அண்ணா பல்கலைக்கழகம் தரவரிசையில் பின்னடைவு: மாணவர்கள் வருத்தம்
    1 Min Read
    சென்னையில் நள்ளிரவு வரை மழை தொடரும் – வானிலை மையம் எச்சரிக்கை
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பதின் பருவத்து பிள்ளைகளின் பழக்கத்தை சாமர்த்தியமாக கையாளுவது எப்படி?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > Uncategorized > பதின் பருவத்து பிள்ளைகளின் பழக்கத்தை சாமர்த்தியமாக கையாளுவது எப்படி?
Uncategorized

பதின் பருவத்து பிள்ளைகளின் பழக்கத்தை சாமர்த்தியமாக கையாளுவது எப்படி?

Nagaraj
Last updated: June 10, 2025 7:02 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: குழந்தைகள் என்றும் சொல்ல முடியாமல் குழந்தை நிலையில் இருந்து சற்று வளர்ந்து, பெரியவர்கள் என்றும் சொல்ல முடியாமல் இரண்டிற்கும் இடையில் உள்ள பருவம், டீனேஜ் என்னும் பதின் பருவம். இந்த பருவத்தை பிள்ளைகள் மற்றும் பெற்றோர் ஆகிய இருவரும் கவனமாக கையாள வேண்டும். இந்த பதின் பருவத்து பிள்ளைகளின் பழக்கத்தை சாமர்த்தியமாக பெற்றோர் எப்படி கையாளுவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

எந்த நேரத்திலும் நீங்கள் பின்பற்ற வேண்டிய ஒரு முக்கியமான அம்சம், அமைதியாக இருப்பது மட்டுமே. இரண்டு தரப்பினரும் வாதத்தை தொடர்ந்து கொண்டே இருந்தால் நிச்சயம் சண்டையில் தான் முடியும். கோபப்படுவது, கத்துவது, திட்டுவது போன்ற செயல்கள் இந்த சூழ்நிலையை இன்னும் மோசமானதாக மாற்றும். ஆகவே உங்கள் கோபத்தில் கட்டுப்பாடு இருக்கட்டும். எப்போதும் பதின்பருவத்து பிள்ளைகளை எளிதாக நிர்வகிக்க அமைதி மிகவும் அவசியம்.

பதின்பருவத்து பிள்ளைகளிடம் வாதம் செய்வதை விடுத்து, அவர்களிடம் எப்போதும் பேசுவதற்கு முயற்சியுங்கள். அவர்களுடைய நடத்தைக்கான வேர் காரணம் என்ன என்பதை அவர்களுக்கு புரிய வைக்க முயற்சியுங்கள். அமைதியாக அவர்களை ஒரு இடத்தில் அமர வைத்து அவரிடம் மனம் விட்டு பேசுங்கள்.

உங்கள் பதின் பருவத்து பிள்ளைகளிடம் அவர்களின் அன்றைய நாள் பற்றி பேசுங்கள். அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் என்னவென்று கேளுங்கள். சில நேரங்களில் பதின்பருவத்து பிள்ளைகளுக்கு அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை வெளியில் சொல்ல ஒரு சிறந்த வழி இல்லை என்ற எண்ணம் அவர்களுக்கு உருவாகலாம்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகலாம். இந்த எண்ணம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மேலும் மேலும் அதிகரிக்கலாம். ஆகவே உங்கள் பிள்ளைகளிடம் எப்போதும் மனம் திறந்து பேசுங்கள். இதனால் உங்கள் மீது அவர்களுக்கு நிறைய நம்பிக்கை எழலாம். அவர்கள் சோகமாக இருக்கும் போது அல்லது தாழ்வாக உணரும் போது உங்களிடம் மறைக்காமல் கூற வேண்டும் என்ற எண்ணம் அவர்கள் மனதில் தோன்றும்.

இன்றைய பிள்ளை வளர்ப்பு முறை என்பது 30 வருடத்திற்கு முந்தைய பிள்ளை வளர்ப்பில் இருந்து மிகவும் வேறுபட்டதாக உள்ளது. தற்போது நவீன காலத்தில் பிள்ளைகள் பெற்றோரை நண்பர்களாக நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மரியாதை, பண்பு போன்ற விஷயங்கள் காணாமல் போய்விட்டன. ஆனால் பிள்ளை வளர்ப்பில் பழைய முறை என்பது முற்றிலும் சிறந்தது. ஆகவே சில அடிப்படை விதிகளை வீட்டில் பின்பற்றுங்கள். பெற்றோருக்கான அடிப்படை மரியாதை எந்த நேரத்திலும் பின்பற்றப்பட வேண்டும்.

பெற்றோரை அவமரியாதையாக நடத்துவது, பெற்றோரை திட்டுவது போன்ற விஷயங்களுக்கு பெற்றோர் பொறுமை காப்பது அவசியமற்றது. இதனை பின்பற்றுவதன் மூலம் பிள்ளைகள் அவர்களுக்கான நிலையை அறிந்து நடந்து கொள்வார்கள்.

You Might Also Like

எனது 17 பில்லியன் டாலர் சொத்துக்களை எனது 106 குழந்தைகளுக்கும் வழங்குவேன்: டெலிகிராம் தலைமை நிர்வாக அதிகாரி

சிம்பு கூறும் நயன்தாரா குறித்து வியக்கச்செய்யும் பேட்டி

தக்லைஃப் தோல்வி சிம்புவின் சம்பளத்தை பாதிக்குமா?

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு – தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

உடலுக்கு ஆபத்தை தரும் டென்ஷனை குறைப்பது எப்படி?

TAGGED:angerargumentconversationParentingrelationshipteenageஉறவுகோபம்டீனேஜ்பெற்றோர்வாதம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
இந்தியா

ஈரான் தலைவர் கொலைப்பட்டால் என்ன செய்வீர்கள்? – புதினின் பதில் சமூக வலைதளங்களில் வைரல்

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?