சென்னை: கர்நாடகாவில் நடிகர் தர்ஷன் விவகாரம் குறித்து நடிகை ரம்யா கருத்து தெரிவித்ததை அடுத்து, சமூக ஊடகங்களில் ரம்யாவை மிரட்டியதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னட நடிகர் தர்ஷன் தொடர்பான ரேணுகாசாமி கொலை வழக்கு குறித்து உச்ச நீதிமன்றத்தின் கருத்துகள் குறித்து நடிகையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரம்யா கருத்து தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, தர்ஷனின் ரசிகர்கள் சிலர் ரம்யாவின் சமூக ஊடகப் பக்கத்தில் ஆபாச மற்றும் கொலை மிரட்டல்களை பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது ஐந்தாவது சந்தேக நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.