மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் விளைந்த 3.3 கிலோ எடையுள்ள அரிய நூர்ஜஹான் மாம்பழம் ரூ.3,800க்கு விற்பனையாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தின் கத்திவாடா பகுதி, அரிய வகை நூர்ஜஹான் மாம்பழ சாகுபடிக்காக புகழ்பெற்ற பகுதியாக விளங்குகிறது. முகலாயப் பேரரசி நூர்ஜஹானின் பெயரால் அழைக்கப்படும் இந்த மாம்பழ வகை, ஆப்கானிஸ்தானிலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த மாம்பழம் பொதுவாக 3 முதல் 5 கிலோ வரை எடை கொண்டிருக்கும். அதன் தனித்துவமான இனிப்பு சுவை மற்றும் அரிய தன்மை காரணமாக சந்தையில் அதிக விலை பெறுகிறது.
அலிராஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பரத்ராஜ் சிங் ஜாதவின் தோட்டத்தில் விளைந்த 3.30 கிலோ எடையுள்ள நூர்ஜஹான் மாம்பழம், கிலோ ரூ.1,151 என்ற அடிப்படையில் மொத்தம் ரூ.3,800க்கு விற்பனையாகியுள்ளது.
இந்த சீசனில் இதுவரை விளைந்த மிகப்பெரிய மாம்பழமாக இது கருதப்படுகிறது. மாத இறுதிக்குள் 4 கிலோ எடையுள்ள மாம்பழங்களும் கிடைக்கக்கூடும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.