புதுடில்லி: பாகிஸ்தானை தூங்க விடாமல் தொடர்ந்து தாக்கும் இந்தியாவின் வேகம் உலக நாடுகளையும் மிரள வைத்துள்ளது.
பாகிஸ்தானின் வான் பாதுகாப்பை சுக்குநூறாக உடைத்துக் கொண்டிருக்கிறது இந்தியா. பாகிஸ்தானில் சீனாவால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பால், இந்தியாவின் தாக்குதல்களை இடைமறிக்க முடியவில்லை.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை பிளாஸ்டிக் மிசைல் மூலம் இந்தியா அழிக்கும் காட்சிகள் வெளியாகி உலக நாடுகளையே மிரள வைத்துள்ளது.
இந்தியாவின் ருத்ர தாண்டவத்தை இப்போதுதான் பாகிஸ்தான் பார்க்க ஆரம்பித்துள்ளது. இதனால், நொடிக்கு நொடி பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த அதிரடி தாக்குதல் பாகிஸ்தான் மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்பாவி மக்களுக்கு எவ்வித ஆபத்து ஏற்படாத வகையில் இந்தியாவின் தாக்குதல்கள் அமைந்துள்ளது. பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்கும் விதத்தில் இந்தியா மேற்கொண்டுள்ள இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு உலக நாடுகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.