சென்னை: அ.தி.மு.க.வினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் உத்தரவை அடுத்து அவை காவலர்கள் அவர்களை வெளியேற்றி உள்ளனர்.
தமிழக சட்டசபை வினாக்கள் விடை நேரத்துடன் தொடங்கியது. பொதுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.
இதனிடையே சட்டசபை தொடங்கியதும் அவையை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்க கோரி அ.தி.மு.க. உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனை கண்டித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, பிரதான எதிர்க்கட்சி தலைவர் உட்பட உறுப்பினர்கள் அவையில் அமர வேண்டும். சட்டசபையில் கேள்விநேரம் முடிந்ததும் பேசலாம். அவைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அ.தி.மு.க. வினர் செயல்படுகின்றனர். சட்டசபையில் அமர்ந்து பேச அ.தி.மு.க.வினருக்கு விருப்பமில்லை என்றார்.
இருப்பினும், அ.தி.மு.க.வினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சபாநாயகர் உத்தரவை அடுத்து அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை அவை காவலர்கள் வெளியேற்றி உள்ளனர்.
முன்னதாக, கருப்பு சட்டை அணிந்தபடி அ.தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபைக்கு வருகை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் தொடர்ந்து சட்டசபையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.